கோவை: சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலையால் 1,900 ஹெக்டேர் நிலம் பறிபோவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 159 கிராம விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நிலத்தை நம்பிதாக் விவசாயிகள் வாழ்கிறார்கள் என்றும், விவசாயிகள், மக்கள் கருத்தை கேட்காமல் நிலத்தை கையகபடுத்த முத்தரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல வீடுகள், வனம், தென்னை மரங்கள் அழிக்கப்படுவதாகவும், ஏற்கனவே சென்னை - சேலம் இடையே 3 பாதைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.