ஹாலாகாண்டி : அசாமில் வெள்ளப்பெருக்குக்கு பலியானவர்கள் எண்னிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. ஹாலாகாண்டி உட்பட 4 மாவட்டங்களில் உள்ள 727 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.