காத்மாண்டு: உலகின் 3வது உயரமான கஞ்சஞ்ஜெங்கா மலையில் இளம் வயதில் ஏறி, இந்தியாவை சேர்ந்த அர்ஜூன் வாஜ்பாய் சாதனை படைத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள 8,000 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள மலைகளின் உயரத்தை அடைவதன் மூலம் மலையேற்றத்தில் ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டத்தை வெல்ல முடியும். இந்த பட்டத்தை நேபாளத்தின் சாங் தாவா செர்பா என்பவர் தனது 30வது வயதில் அடைந்தார். சாங்கின் சாதனையை முறியடிக்க இந்தியாவின் மலையேற்ற வீரரான அர்ஜுன் வாஜ்பாய் களமிறங்கி உள்ளார். கடந்த 2010ல் தனது 16வது வயதில் இவர் சாதனை பயணத்தை தொடங்கினார்.