மதுரை: மதுரை மாவட்டம், அழகாபுரியை சேர்ந்த கருப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் 6,081 மேல்நிலைப்பள்ளிகள், 5,803 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. உயர்நிலைப்பள்ளிகளில் 884, மேல்நிலைப்பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் 4,092 ஆசிரியர் பணியிடங்கள் ஓராண்டிற்கும் மேலாக காலியாக உள்ளன. வரும் மே மாத இறுதியில் சுமார் 425 தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். 2018-19ம் கல்வி ஆண்டில் 1,500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்புள்ளன.