சென்னை: இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை மூலம் மிரட்டுவதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2009 ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அதற்கு முந்தைய மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ. 14 ஆயிரம் ஊதிய முரண்பாடு உள்ளதை களைய வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.