சென்னை: டீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கச்சா எண்ணெய் விலை குறைந்த போது மத்திய அரசு கலால் வரியை பலமுறை உயர்த்தி டீசல், பெட்ரோல் விலை கொஞ்சமும் குறைக்காமல் அரசுக்கு அதிக லாபம் ஈட்டும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தது. விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.