கல்லாறு: மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு அரசு தோட்டக்கலைப்பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. பலாப்பழ வாசனைக்கு காட்டு யானைகள் மற்றும் குரங்குகள் அதிக அளவில் படை எடுப்பதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைத்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் இந்த தோட்டக்கலைப்பண்ணை அமைந்துள்ளது அரசு தோட்டக்கலைப்பண்ணை இயற்கை கொஞ்சி விளையாடும் அரசு பண்ணையில் கோடை காலத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர். அரிய வகை பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், அலங்காரச்செடிகள், செயற்கை நீர்விழ்ச்சி என சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த பகுதியாக இந்த பண்ணை இருக்கிறது. தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் பலா மரங்களில் பழங்கள் கனிந்து தொங்குகின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் பலா வாசம் மணக்கிறது.