கடையம்: கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த காற்று, இடி மின்னலுடன் சாரல் மழை பெய்தது. தெருக்களில் கிடந்த குப்பைகள் சூறாவளி காற்றில் சுழன்றடித்தன. கடையத்தில் இருந்து நெல்லை செல்லும் வழியில் வெள்ளிகுளத்தில் நவாப்பழ மரத்தின் பெரிய மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் கடையத்தில் இருந்து நெல்லை சென்ற வாகனங்கள் ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம் வழியாக நெல்லை சென்றன. நெல்லையில் இருந்து வந்த வாகனங்கள் ஏபி நாடானூர் வழியாக கடையம் வந்தன. சாலை பணியாளர் கருப்பசாமி, மற்றும் வெள்ளிகுளம் இளைஞர்கள் மரக்கிளையை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.