காபூல்: ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள், 4 போலீசார் உயிரிழந்தனர். ஆப்கன் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் வாக்காளர் பதிவு மையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அப் கமாரி மற்றும் குவாதிஸ் மாவட்டங்களில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முறையே 9 மற்றும் 5 ராணுவ வீரர்கள் என 14 ராணுவத்தினர் உயிரிழந்தனர். அதேபோல், 4 போலீசார் கொல்லப்பட்டனர். 3 போலீசார் காயமடைந்தனர்.