இறைத்தூதர் (ஸல்) எப்போதும் புன்னகை சிந்தும் முகத்தினராகவே இருப்பார். “நபிகளாரை விட அதிகம் புன்னகை புரிபவரை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று நபித்தோழர்கள் கூறியுள்ளனர்.“உங்கள் சகோதரனைப் புன்னகையுடன் பார்ப்பதும் ஓர் அறச்செயலே” என்று கூறியவர் நபிகளார்.ஓர் அடியானின் வேண்டுதலைக் கேட்டு இறைவனே சிரித்துவிட்டதாக நபிமொழி நூல்களில் காணப்படுகிறது. என்ன அந்த வேண்டுதல்?
அந்தப் பெரிய, அழகிய மரத்தின் கீழ் வந்து சேர்ந்த அடியானுக்குச் சற்று தொலைவில் சொர்க்கத்தின் வாசல் தெரிந்தது. மனம் சும்மா இருக்குமா? மீண்டும் ஆரம்பித்தான்.“இறைவா, அதோ அந்த சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு விட்டுவிடு” என்று வேண்டினான்.“உன் வாக்குறுதி என்னப்பா ஆயிற்று?” என்று கேட்டான் இறைவன். “இறைவா, இதுதான் கடைசி. இதற்குப் பிறகு எதையும் கேட்க மாட்டேன்” என்றான் அடியான். இறைவன், அந்த அடியானைச் சொர்க்கத்தின் வாசலில் விட்டான்.சொர்க்கத்தின் நறுமணம் அடியானுக்குக் களிபேருவகை அளித்தது. உள்ளே சொர்க்கவாசிகள் மகிழ்ச்சியுடன் உரையாடுவதும் கேட்டது. சும்மா இருப்பானா என்ன? மீண்டும் ஆரம்பித்துவிட்டான்.
இந்த வேண்டுதலைக் கேட்டு இறைவனே சிரித்துவிட்டான். இதை எடுத்துரைத்த நபிகளாரும் தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். இந்தச் சுவையான நிகழ்வில் இறைவனுக்கும் அடியானுக்கும் உள்ள நெருக்கமும், இறைவனின் தங்குதடையற்ற கருணையும் வெளிப்படுகின்றன அல்லவா? – சிராஜுல்ஹஸன்…
The post இறைவனே சிரித்துவிட்டான்..! appeared first on Dinakaran.