- ராம்தேவ்
- கவிதாலய சரவணன்
- எஸ். ரவி மரியா
- ஜீவா
- நாட்டி நடராஜ்
- அக்ஷரா விஜய்
- ராதாரவி
- பழல்
- கருப்பையா
- நாஞ்சில் சம்பத்
- பேரரசு
- கஞ்சா காருபு
- அக்னி எஸ். வருண்
- கார்த்திக் எஸ். நாயர்

திரைக்கு வந்த ‘பழகிய நாட்கள்’, ‘மூன்றாம் மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்தேவ், தற்போது கவிதாலயா சரவணன் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்கியுள்ள படம், ‘மக்கள் தலைவா’. ஜீவா நடித்த ‘ஆசை ஆசையாய்’, நட்டி நடராஜ் நடித்த ‘மிளகா’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ரவிமரியா கதையின் நாயகனாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் அக்ஷரா விஜய், ராதாரவி, பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி எஸ்.வருண் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்ய, துளசி ராமன் இசை அமைத்துள்ளார். எஸ்.வெங்கடேசன், ஆர்.சந்திரசேகரன், டி.ராம்குமார் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
காமெடியுடன் கூடிய பொலிடிக்கல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. படம் குறித்து ராம்தேவ் கூறுகையில், ‘இக்கதையை இயக்குனர் சி.ரங்கநாதன் மூலமாக ரவிமரியாவிடம் சொன்னேன். கதாநாயகனாக நடிக்க தயங்கிய ரவிமரியா, பிறகு ஆழமாக யோசித்துவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டார்’ என்றார். ரவிமரியா கூறும்போது, ‘வில்லன், காமெடியன், குணச்சித்திரம் உள்பட எந்த கேரக்டரில் நடித்தாலும் நான் நிறைய பேசுவேன். ஆனால், இதில் நான்தான் கதாநாயகன் என்பதால் நிறைய பேசவில்லை’ என்றார்.

