×

துபாயில் சிக்கியிருந்த நடிகர் அஜித் சென்னை திரும்பினார்

 

சென்னை: போர் பதற்றம் காரணமாக துபாயில் சிக்கியிருந்த நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக சென்னை திரும்பினார். அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் ஈரான் மீது போர் தொடுத்துள்ளது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் அமைந்துள்ள துபாய், சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

துபாயில் கார் பந்தயத்துக்காக சென்றிருந்த அஜித்குமார், போர் பதற்றம் காரணமாக அங்கேயே சிக்கினார். விமான சேவைகள் முடக்கப்பட்டதால் அவரால் திட்டமிட்டபடி நாடு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் துபாயில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நேற்று மாலை அவர் சென்னை திரும்பினார். துபாயில் தான் பாதுகாப்பான சூழலில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ajith ,Dubai ,Chennai ,Ajith Kumar ,US ,Iran ,Saudi Arabia ,Kuwait ,
× RELATED ஹிப்ஹாப் ஆதியின் இசை நிகழ்வில் அனிருத்: சென்னையில் கொண்டாட்டம்