இந்திய மருத்துவ துறையில் பார்மசிஸ்ட்பணிக்கு விண்ணப்பிக்க ஆக.25 கடைசி நாள்

சென்னை: இந்திய மருத்துவம், ஓமியோபதி துறையில் தினக்கூலி அடிப்படையில் மருந்து வழங்குநர், சிகிச்சை உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 25ம் தேதி கடைசி நாள் ஆகும். சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பு: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெற்றிடமாக உள்ள தினக்கூலி அடிப்படையில் மருந்து வழங்குநர்/ சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கான தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை //www.tnhealth.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 25ம் தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இந்திய மருத்துவ துறையில் பார்மசிஸ்ட்பணிக்கு விண்ணப்பிக்க ஆக.25 கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: