ஆண்கள் மாரத்தான் கிப்சோகே சாம்பியன்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடந்த ஆண்கள் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நடப்பு சாம்பியனான கென்யா வீரர் எலியுட் கிப்சோகே (36 வயது) தங்கப் பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை (42 கி.மீ.) 2 மணி, 8 நிமிடம், 38 விநாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். நெதர்லாந்தின் நகீயே அப்தி (2:09:58) வெள்ளிப் பதக்கமும், பெல்ஜியம் வீரர் பஷீர் அப்தி (2:10:00) வெண்கலமும் வென்றனர். மகளிர் மற்றும் ஆண்கள் மாரத்தான் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, நிறைவு விழாவின்போது நடத்தப்பட்டு தனி கவுரவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post ஆண்கள் மாரத்தான் கிப்சோகே சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: