ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்த அஜித்

தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், தற்போது கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் துபாயில் ரேஸ் சம்பந்தமான சில கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அதில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘உலர்ந்த, ஈரமான இருநிலையிலான ரேஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். பகல், இரவு என்ற பேதமும் எனக்கு கிடையாது. பசி மற்றும் தாகத்துடன் ரேஸ் ஓட்ட விரும்ப மாட்டேன்.

கார் ரேஸில் ஈடுபடுவதற்கு முன்பு, எப்போதுமே எனது வலது கையுறையை முதலில் அணிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்’ என்றார். `குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித் குமார், அப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் வரை எந்த அப்டேட்டும் கேட்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: