கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாக நடிப்பேன் : பிந்து மாதவி

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என்றார் பிந்து மாதவி. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் யாருக்கும் அஞ்சேல், சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய், மாயன் படங்களில் பிந்து மாதவி நடித்து வருகிறார். அவர் கூறியது: தமிழில்தான் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன். நடிப்பில் சிறு இடைவெளி விழுந்திருப்பது உண்மைதான்.

அது நானாக ஏற்படுத்தியது கிடையாது. நல்ல கதைகள் அமையாமல் போனதும் ஒரு காரணம். இப்போதுதான் சில வாய்ப்புகள் அமைந்து, எனது கேரக்டர்களும் பிடித்தது போல் அமைந்திருக்கிறது. நிர்வாணமாக நடிப்பது பற்றி கேட்கிறார்கள். யாரும் பணத்துக்காக அப்படி நடிப்பது கிடையாது. கதைக்கு தேவைப்படும்போது, அது தவிர்க்க முடியாதது. எனக்கு அப்படி வாய்ப்பு வந்தால், கதைக்கு மிகவும் தேவையென்றால் மட்டுமே அதுபோல் நடிப்பேன்.

Related Stories: