சென்னை தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா?: கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை Jul 16, 2021 NEET தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை அமைச்சர் மகேஷ் பொய்யாமோசி எசிலாகம், சென்னை சென்னை: சென்னை, எழிலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தோம். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. புதுச்சேரியிலும் தற்போது பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. அந்த கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது, நீட் தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்க இருக்கிறோம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்ய இருக்கிறோம். அப்போது நீட் பயிற்சி வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும். ஏற்கெனவே இந்த பயிற்சி ஆன்லைன் மூலம் அளிக்கபடுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்கள் கருத்தாக உள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிவித்துள்ளது. இது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிளஸ் 2 முடிவுகள் ரெடி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் பிளஸ்- 2, வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தயார் நிலையில் இருக்கிறது. தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசித்தோம். அவர் அனுமதி அளித்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார். … The post தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா?: கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை 7 மணி நேரம் பாதிப்பு; அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் இயல்புநிலை திரும்பியது
28 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 185 சவரன், 398 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்
பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்
புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்
கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு
மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்
பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து வெளியேற வசதியாக நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: அகற்றப்படும் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு ஒதுக்கீடு
திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு