பிசி ஆகிறார் கீர்த்தி பாண்டியன்

80களில் பிசியாக இருந்த ஹீரோ அருண் பாண்டியன். அவரது மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு  அவரது தந்தை அருண் பாண்டியன் தயாரிப்பில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில பிசியாக இருந்தார். அதன்பலனாக கண்ணகி என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்து முடித்து விட்டார். தற்பேது புதிதாக கொஞ்சம் பேசினால் என்ன என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை கிரி மூர்ப்பி என்பவர் இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வினோத் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Related Stories: