முதன் முறையாக பாவாடை தாவணியில் ஆன்ட்ரியா

நடிகை ஆன்ட்ரியா சென்னையில் பிறந்து வளர்ந்த அல்ட்ரா மார்டன் பொண்ணு, ஆங்கிலோ இண்டியன் கலாச்சாரத்தை பின்பற்றுகிறவர். ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்டாகவும், பாடகியாகவும் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பெரும்பாலும் அவர் சினிமாவில் நகர்புறத்து கதைகளில் மார்டன் பெண்ணாகவே நடித்திருக்கிறார். பொது வெளியிலும், தனது சமூக வலைத்தளத்திலும் மார்டன் உடையில்தான் காட்சி அளிப்பார். சமீபத்தில்கூட தான் பாத்டப்பில் குளிக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் பாவாடை, தாவணி அணிந்து காட்சி தரும் ஒரு படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அச்சு அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி இருக்கிறார். இந்த படம் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: