ஆர்ஆர்ஆர்: இரண்டு வெளியீட்டு தேதி அறிவிப்பு

பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கொண்டு வரப்பட்ட ஊரடங்குகள், திரையரங்கில் 50 சதவிகித இருகைக்கான அனுமதி. இவற்றால் வெளியீடு நிறுத்தப்பட்டது. இப்போது ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்க புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இந்தியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்தால், திரையரங்கிற்கு முழு அனுமதி அளித்தால் மார்ச் 18ம் தேதி வெளியாகும். அப்போதும் நிலைமை சீராகாவிட்டால் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். ஒரு படத்திற்கு இரண்டு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: