ஓடிடிக்கு வந்தார் அஞ்சலி

விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் மற்றும் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடித்த மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்களை இயக்கியவர் திரு. அவரது இயக்கத்தில் உருவாகும் வெப்தொடர் ஒன்றில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஜான்சி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை நடிகர் கிருஷ்ணா தயாரிக்க உள்ளார். இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இது குறித்த புகைப்படங்களை அஞ்சலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

படங்களை மட்டும் இயக்கி வந்த திரு, இந்த தொடர் மூலம் ஓடிடி தளத்தில் நுழைகிறார். அதுபோல், அஞ்சலியும் முதல்முறையாக வெப்தொடரில் நடிக்கிறார். இது திரில்லர் பாணியிலான வெப்தொடராக உருவாகிறது. இதில் நடித்தபடி ராம் இயக்கும் படத்திலும் அஞ்சலி நடித்து வருகிறார். இதற்கு முன் கற்றது தமிழ், தரமணி, பேரன்பு ஆகிய ராம் இயக்கிய படங்களில் அஞ்சலி நடித்தது குறிப்பிடத்தக்கது. இதில் கற்றது தமிழ் தான் அஞ்சலியின் முதல் படம்.

Related Stories: