தமிழில் படங்களே இல்லாததால், தெலுங்கில் டி.வி நிகழ்ச்சி நடத்தச் சென்றுவிட்டதாக சமந்தா பற்றி செய்தி வெளியானது. ஆனால், தன்னைப் பற்றி வெளியாகும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் செய்திகளுக்கு விளக்கம் அளிப்பதில்லை, நன்றி தெரிவிப்பது இல்லை என்ற பாலிசியை சில வருடங்களாக அவர் கடைப்பிடித்து வருவதால், எது பற்றியும் விளக்கம் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவன் தன் காதலி நயன்தாராவை மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைத்து இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தார். அப்போது படத்தின் கதைப்படி நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும், சமந்தாவுக்கு மிகவும் சிறிய கேரக்டர் என்றும் கூறப்பட்டது. இதையறிந்த சமந்தா, இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியானது.