பா.ரஞ்சித்திடம் கதை கேட்காமல் நடிக்கும் ஆனந்தி

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் ஏற்கனவே பரியேறும் பெருமாள் என்ற படத்தை தயாரித்தார். அடுத்து இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு  படத்தை தயாரித்திருக்கிறார். அதியன் ஆதிரை இயக்கும் இப்படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த், லிஜிஷ் நடித்துள்ளனர். தென்மா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியானது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆனந்தி,’பா.ரஞ்சித் படமென்றால் கதை கேட்காமலேயே நடிப்பேன்.

ஏனென்றால் அதில் சொல்லப்படும் கருத்துக்கள் மிகவும் வலுவானதாக இருக்கும் என்றார். இயக்குனர் அதியன் ஆதிரை பேசும்போது,’தோழர் என்ற வார்த்தையை சொன்னதற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்படம் ஒரு லாரி டிரைவரின் கதையை சொல்லும். இரும்பு கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. அட்டகத்தி படம் வந்தபிறகு எனக்கான கதைகளையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தோழர் ஆனந்தி அழகாக நடித்துள்ளார். இதில் நடித்திருக்கும் ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. தினேஷ், முனிஷ்காந்த் நடிப்பு பேசப்படும்’ என்றார்.

Related Stories: