டைகருடன் நடிகை டெரர்

நடிகைகளில் சிலர் அட்வென்சர் அதாவது சாகசங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். விலங்கு பூங்காவுக்கு சென்றால் அங்குள்ள மிருகங்களுக்கு உணவளிப்பது, விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டு அந்த காட்சிகளை வீடியோவாக்கி தனது இணைய தள பக்கத்தில் வெளியிடுகின்றனர். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் மான்களுக்கு உணவளிப்பது, குட்டி சிம்பான்ஸிக்கு பாட்டிலில் பாலூட்டுவது, இரும்பு வேலிக்கு பின்புறம் உள்ள சிங்கங்களுடன் விளையாடுவது என தனது சிறுபிள்ளை விளையாட்டுகளை வெளியிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து இளம் நடிகை மாளவிகா ஷர்மா தற்போது புலி மீது படுத்துக்கொண்டு துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளார். டோலிவுட்டில், ‘நெலா டிக்கெட்’ படத்தில் நடித்திருப்பதுடன் டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார் மாளவிகா ஷர்மா. தவிர மாடல் அழகியாகவும் வலம் வருகிறார். தன் இருப்பை வெளிக்காட்ட எண்ணிய மாளவிகா தாய்லாந்து நாட்டில் பட்டாயாவில் உள்ள புலிகளின் சரணாலயத்துக்கு சென்றார். அங்குள்ள ஒரு புலியின் அருகில் சென்று அதை தடவி கொடுத்தவர் பின்னர் அதன் மீது படுத்துக்கொண்டார்.

புலியின் அருகில் தனியாக சென்று உட்கார்ந்து அதை தடவிக்கொடுக்கும் தைரியம் எப்படி வந்ததது என்றபோது,’நான் அருகில் சென்றபோது புலிக்கு என்னை பிடித்துவிட்டது. சிறிது நேரம் விளையாடிவிட்டு அது தரையில் படுத்துக்கொண்டது அதன் மீது நான் படுத்துக் கொண்டேன். இது நிஜப்புலி. உறக்கத்தில் இல்லாமல் அகலமாக கண் விழித்தபடி இருந்தது. என்னவொரு டெரர் எக்ஸ்பீரியன்ஸ். அந்தப் புலி சிறுவயதிலிருந்தே மனிதர்கள் சுற்றி இருக்கும்போதும் சாதாரணமாக இருக்க பழக்கப்படுத்தப்பட்டது’ என்றார். மாளவிகா.

Related Stories: