நடிகை ஐஸ்வர்யாராய், நடிகர் அபிஷேக் பச்சனை மணந்தார். இவர்களது 7 வயது குழந்தை ஆராத்யாவை கவனித்து கொள்வதற்காக படங்களில் நடிக்காமல் சில வருடம் ஒதுங்கியிருந்த ஐஸ்வர்யாராய், ஆராதயாவுக்கு விவரம் தெரிந்து பள்ளிக்கு செல்லத் தொடங்கியதும் மீண்டும் நடிக்க வந்தார். கடந்த 2016ம் ஆண்டு, ‘ஹே தில் ஹை முஷ்கில்’ இந்தி படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்தார். தன்னைவிட வயதில் இளையவரான ரன்பீருடன் ஐஸ்வர்யாராய் முத்தக்காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடித்தது சர்ச்சையானது. இதனால் ஒரு வருடம் புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்தார். சர்ச்சைகள் ஓய்ந்த பிறகு கடந்த ஆண்டு, ‘ஃபன்னிகான்’ படத்தில் நடித்தார். இப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து புதுபடம் நடிக்காமல் அமைதி காத்து வருகிறார்.