அனுராக் காஷ்யப் அந்த நேரத்தில் அளவுக்கதிகமாக மது அருந்துவார். இதனால் அவருக்கு நேரத்தின் மதிப்பு தெரியாது. பிறகு அவர் விக்ரமாதித்யா மோட்வானேவை எழுத்துப் பணிக்கு அழைத்து வந்தார். ‘இவர் உதவியாக இருப்பார்’ என்று சொல்லி, விக்ரமாதித்யா மோட்வானேவை அறிமுகம் செய்தார். பிறகு அனைத்து பணிகளும் விக்ரமாதித்யா மோட்வானேவிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் உருவாக்க விரும்பியது வேறு. அவரது பார்வை வேறு. இறுதியில், நாங்கள் அனைவரும் கடுமையான கருத்து மோதலில் ஈடுபட்டோம். இந்த பிரச்னைக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் அனுராக் காஷ்யப்புடன் பேசியது. அவரை கையாள்வது என்பது மிகவும் கடினமாகி விட்டது’ என்றார். விவேக் அக்னிஹோத்ரியின் கருத்துக்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், ‘விவேக் அக்னிஹோத்ரி ஒரு மிகப்பெரிய பொய்யர்.
அவர்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தியபோது நான் இந்தியாவில் இருந்தேன். அவர் விக்ரமாதித்யா மோட்வானேவின் கதையையோ அல்லது எனது கதையையோ விரும்பவில்லை. ‘லஹான்’ படம் போன்ற கால்பந்து விளையாட்டு கதை கொண்ட படத்தை உருவாக்க விரும்பினார். அதற்காக தனது சொந்த எழுத்தாளரிடம் சொல்லி, அந்த மோசமான கதையை எழுத வைத்திருந்தார். நானோ அல்லது விக்ரமாதித்யா மோட்வானேவோ ஒருநாள் கூட அந்த படப்பிடிப்பு தளத்துக்கு சென்றது இல்லை’ என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர்கள் மோதிக்கொள்வதை நெட்டிசன்களும், ரசிகர்களும் கமென்ட் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
