ஆடிப்பெருக்கை முன்னிட்டு 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் நடைபெற்ற அன்னதான விழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிங்கம்புணரி சித்தர் முத்து வடுகநாதர் கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஆண்டுதோறும் அன்னதான விழா சிறப்பாக நடைபெறும். வணிகர் நல சங்கம் சார்பாக 36வது ஆண்டு அன்னதான விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை சித்தருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம், வாசனை திரவியங்கள், பழச்சாறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதைத் தொடர்ந்து கோயில் முன்பு போடப்பட்டிருந்த மெகா பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக மலை போல் குவிக்கப்பட்டு இருந்த அன்னத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய அன்னதான விழா மாலை வரை நடைபெற்றது. அறுசுவை உணவு வழங்கப்பட்ட இந்த அன்னதான விழாவில் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் உணவு வகைகளை பரிமாறினர். இதேபோல் வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி 18ம் பெருக்கு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து முன்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அன்னதானம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

The post ஆடிப்பெருக்கை முன்னிட்டு 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Related Stories: