கோவை: கோவை காந்திமாநகர் ஸ்ரீராம் நகர் 2வது வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் ஏழாம் ஆண்டு திருவீதி உலா மற்றும் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி இன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு காலை 9 மணிக்கு செல்வவிநாயகர் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பால்குட அபிஷேகம் அலங்கார மஹாதீபாரதனையும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.