பாழடைந்த பேருந்து நிழற்குடை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை

பள்ளிகொண்டா:  பள்ளிகொண்டா அருகே நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை பாழடைந்து புதர்மண்டி இருந்தது. இவற்றை  நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று சீரமைத்தனர்.பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைதுறையினரால் பேருந்து நிழற்கூடை அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அவற்றை குடிமகன்கள் மது அருந்திவிட்டு பாட்டில்கள் வீசி சென்றதால் பயன்படுத்த முடியாமல் போனது. அதனால் புதர்மண்டி பேருந்து நிழற்குடை பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில், இதனை பற்றி செய்தி படத்துடன் நேற்று முன்தினம் ‘‘தினகரன்’’ நாளிதழில் விரிவாக வெளியிடப்பட்டது. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறையினர் அதனை சீர் செய்து பேருந்து நிழற்குடையை தூய்மைப்படுத்தினர். இந்த தூய்மைப்பணி செய்த நெடுஞ்சாலை துறைக்கும், பணி செய்ய தூண்டுகோளாக இருந்து செய்தி வெளியிட்ட ‘தினகரன்’ நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்….

The post பாழடைந்த பேருந்து நிழற்குடை சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை appeared first on Dinakaran.

Related Stories: