பள்ளிகொண்டா: விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று வெகுவிமரிசையாக திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடனுறை மார்கபந்தீஸ்வரர் கோயிலில் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்றுமுன்தினம் யானை வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.