நான் செகண்ட் ஹீரோ தான்…நானி ‘கலகல’

சென்னை: டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’. விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, அபிராமி, அதிதி பாலன், சாய்குமார் நடித்துள்ளனர். வரும் 29ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அப்போது நானி பேசுகையில், ‘தமிழ்நாட்டு மக்களின் அன்பு நெகிழ வைக்கிறது. தொடர்ந்து நான் தமிழ்ப் படங்களைப் பார்த்து ரசிக்கிறேன்.‌ இயக்குனர்கள் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் போன்ற ஏராளமான ஆளுமைகள் தமிழில் இருக்கின்றனர். ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படம் எளிய ஆக்‌ஷன் எண்டர்டெயினர். தமிழ் மக்களின் உணர்வு, தெலுங்கு மக்க ளின் உணர்வு என்று பாகுபாடு பார்க்காமல், அனைத்து தரப்பு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் படத்தை உருவாக்கினோம்.

எஸ்.ஜே.சூர்யாதான் ஹீரோ. நான் செகண்ட் ஹீரோ. பிரியங்கா அருள் மோகனின் கண் அசைவே பல விஷயங்களைச் சொல்லிவிடும். அவர்தான் நேச்சுரல் ஸ்டார். கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தைப் பார்த்ததும் அபிராமி யின் தீவிர ரசிகனாகி விட்டேன்’ என்றார்.

பிரியங்கா அருள் மோகன் பேசும்போது, ‘நானும், நானியும் ‘கேங் லீடர்’ படத்துக்குப் பிறகு இணைந்துள்ளோம். இதில் பெண் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறேன்’ என்றார். எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ‘உதவி இயக்குனராக இருந்து, நட்சத்திர நடிகராக உயர்ந்துள்ள நானிக்கு தெலங்கானா, ஆந்திராவைப் போலவே தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர், ரசிகைகள் இருக்கின்றனர்’ என்றார்.

The post நான் செகண்ட் ஹீரோ தான்…நானி ‘கலகல’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: