செல்வகணபதி கோயிலில் வருஷாபிஷேகம்

நெல்லை: ரெட்டியார்பட்டி அருகே  ஸ்ரீனிவாசா அவென்யூவில் அமைந்துள்ள செல்வகணபதி கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலை 6 மணிக்கு கணபதிஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், 9 மணிக்கு மூலவர் விமான மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் தர்மகர்த்தா சுப்பிரமணியன், சங்க தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் ரவிக்குமார், துணை செயலாளர் தங்கபெருமாள், செயல் தலைவர் கணேசன், பொருளாளர் ஸ்ரீராம், கோயில் நிர்வாக செயலாளர் பழனி, பொருளாளர் முத்துசங்கர், நிர்வாக கமிட்டியார் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: