துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. மருங்காபுரி தாலுகா துவரங்குறிச்சியில் உள்ள பூதநாயகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா, பொன்னூஞ்சல் விழா ஆகிய திருவிழாக்கள் நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று (17ம்தேதி) பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கி வருகிற அக்டோபர் 4ம்தேதி வரை நடைபெறும். திருவிழாவில் முதல் நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நேற்று மாலை தொடங்கியது 5 மணிக்கு நாட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பூத்தட்டுகளை ஏந்தி மேள தாளங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தனர்.