இனிமேல் இசை ஆல்பத்தில் நடிகரானது ஏன்? லோகேஷ் கனகராஜ் பதில்

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இசை ஆல்பம், இனிமேல். இந்த ஆல்பத்துக்கு ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் பாடலை எழுதியுள்ளார். துவாரகேஷ் பிரபாகர் இயக்கியுள்ளார். இதில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். யூடியூபில் வெளியாகியுள்ள இனிமேல் இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் கூறியது:

எனக்கு நடிப்பில் ஆர்வம் கிடையாது. ஆனால், இனிமேல் டீம் என்னை நடிக்க கேட்டதும் மறுக்க முடியவில்லை. காரணம், கமல்ஹாசன் சார்தான். அவரது ராஜ்கமல் நிறுவனம் எனக்கு தாய்வீடு போல. அதனால்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதில் டைரக்டராக எனது தலையீடு எதுவுமே கிடையாது. இயக்குனர் என்ன சொன்னாரோ அதை மட்டும் செய்தேன். நிறைய டேக்குகள் வாங்கித்தான் நடித்தேன். தொடர்ந்து நடிக்கும் எண்ணம் கிடையாது என்றார்.

ஸ்ருதிஹாசன் பேசும்போது, ‘விக்ரம் பட ஷூட்டிங்கில் லோகேஷை பார்த்தபோது, கேமராவுக்கு அவரது முகம், தோற்றம் சரியாக இருக்கும் என தோன்றியதால் அவரை இந்த ஆல்பத்துக்கு தேர்வு செய்தேன். ஆங்கிலத்தில் பல இசை ஆல்பங்கள் செய்திருந்தாலும் தமிழில் இதுவே முதல் முறை. இது தாமதம்தான். ஆனால், இனி தொடர்ந்து தமிழிலும் இசை ஆல்பம் உருவாக்குவேன்’ என்றார்.

The post இனிமேல் இசை ஆல்பத்தில் நடிகரானது ஏன்? லோகேஷ் கனகராஜ் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: