செங்கல்பட்டில் வரும் 8ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 8ம் தேதி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 3 மாதத்துக்கு ஒருமுறை தனியார் துறை வேலைவாய்ப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கல்லூரி இணைந்து வரும் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட தனியரர் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 3,500க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 8 முதல் 10, 12, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், டிப்ளமோ நர்சிங், ஆய்வக உதவியாளர், மருந்தாளுனர் படித்த வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வரும் 8ம்தேதி காலை 9 மணிமுதல் 2 மணிவரை செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கல்லூரியில் நடக்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என கூறப்பட்டுள்ளது….

The post செங்கல்பட்டில் வரும் 8ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: