மேலூர்: மேலூர் நாகம்மாள் கோயிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர். மேலூர் திருவாதவூர் ரோட்டில் அமைந்துள்ள நாகம்மாள் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் 5 ஆயிரம் பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். நேற்று மாலை 6 ஆயிரத்து 540 பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இவர்களின் ஊர்வலம் மண்கட்டி தெப்பகுளம், பெரியகடை வீதி, அழகர்கோவில் ரோடு, செக்கடி வழியாக கோவிலை சென்றடைந்தது. மாலை துவங்கிய ஊர்வலம் இரவு வரை நீடித்தது.