அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்க ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘J.பேபி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளதாக பா.ரஞ்சித் தெரிவித்தார். மேலும் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரித்த படங்களுக்கு முதல் முறையாக எந்த சீனும் கட் செய்யப்படவில்லை என்றும் எந்த வசனங்களும் மியூட் செய்யவில்லை என்றும் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இப்படம் வருகிற மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் “தாயை விடத் தூய்மையான மந்திரம் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post சென்சாரில் பிரச்னையின்றி வெளியாகும் பா.ரஞ்சித் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.