ரவுடி கொலையில் 5 வாலிபர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வாயலூரை சேர்ந்த பிரபல ரவுடி மூர்த்தியை நேற்று முன்தினம் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. புகாரின்படி மீஞ்சூர் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இதுதொடர்பாக மோகன்ராஜ்(30), மணிகண்டன்(28), சுந்தர்(28), கிஷோர்(27), அருண்குமார்(30) ஆகியோரை நேற்று கைது செய்து மீஞ்சூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், வாயலூரை சேர்ந்த காண்டிராக்டர் சிலம்பரசனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது மணிகண்டன், மோகன்ராஜ் ஆகிய தரப்பினருக்கும், மூர்த்தி தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்டி விடுவதாக இரு கோஷ்டியும் சபதம் எடுத்துள்ளது. அதன்படி மணிகண்டன், மோகன்ராஜ் கோஷ்டியினர் மூர்த்தியை படுகொலை செய்தது தெரியவந்தது….

The post ரவுடி கொலையில் 5 வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: