காவல் சிறார் மன்ற மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை: காவல் சிறார் மன்ற மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காவல் சிறார் மன்ற சிறுவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தை சேர்ந்த 50 சிறுவர்கள் ஷெனாய் நகர் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இவர்களுடன் மன்றங்களின் மேற்பார்வையாளரும், மேற்கு மண்டல இணை ஆணையாளருமான ராஜேஸ்வரி பயணம் செய்தார். இதேபோல், வடக்கு மண்டலத்தை சேர்ந்த 50 சிறுவர்கள் சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்….

The post காவல் சிறார் மன்ற மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: