குளு குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்: லாட்ஜ், காட்டேஜ்கள் நிரம்பின

ஊட்டி: ஊட்டியில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் லாட்ஜ், காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. சர்வதேச சுற்றுலா நகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்கி வருகிறது இங்கு நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக, ஏப்ரல், மே மாத கோடை சீசன் சமயத்தின் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவார்கள். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவால் கோடை விழாக்கள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளது.இந்நிலையில், இந்தாண்டுக்கான கோடை சீசன் துவங்கிய நிலையில் சமவெளி பகுதிகளான கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் குளு குளு காலநிலை நிலவும் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதேபோல் கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகளும் அதிகளவு ஊட்டியில் குவிகின்றனர். இரு ஆண்டுகளுக்கு பின் மே மாதத்தில் மலர் கண்காட்சி உள்ளிட்ட கோடை விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மே தினமான நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.  ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ள நிலையில் லாட்ஜ்கள், ஓட்டல்கள், காட்டேஜ்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பின….

The post குளு குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்: லாட்ஜ், காட்டேஜ்கள் நிரம்பின appeared first on Dinakaran.

Related Stories: