நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 544 குறைந்து ரூ.39,656க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக சரிந்துள்ளது. ஆம் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 544 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,957 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி 73.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்….

The post நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 544 குறைந்து ரூ.39,656க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Related Stories: