கொரியன் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி

சன்சியோன்: கொரியன் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். அரையிறுதியில் தென் கொரியாவின் ஆன் சேயங்க் உடன் நேற்று மோதிய சிந்து 14-21, 17-21 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுயில்  களமிறங்கிய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 19-21, 16-21 என்ற நேர் செட்களில் போலந்தின்  ஜோனதன் கிறிஸ்டியிடம் 49 நிமிடங்களில் போராடி தோற்றார். இத்தொடரின் அனைத்து பிரிவிலும் இந்தியாவின் பதக்க வேட்டை ஏமாற்றத்தில் முடிந்தது….

The post கொரியன் ஓபன் பேட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: