மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்: வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அலுவலகத்திலுள்ள மன்ற கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.தேசிங்கு, செயலர் அ.கென்னடி பூபால ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் ச.விஜயகுமாரி, ஆர்.ஹேமாவதி, கோ.குமார், ஜெ.பாண்டுரங்கன், கோ.சுதாகர், எம்.சித்ரா, மு.சாரதாம்மா, எம்.ஏ.ராமஜெயம், கி.கீதா, எம்.அம்மணி, டி.தென்னவன், உ.சிவசங்கரி, ச.சரஸ்வதி, ஜி.இந்திரா, ஆ.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்தும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் 22 மாவட்ட கவுன்சிலர்களின் பகுதிகளிலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  முன்னதாக குழந்தைகள் நல மாவட்ட திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர் தங்களது துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் பயிற்சி அளித்தார். இதேபோல் மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் பாண்டியம்மாள் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அப்துல்ஹமீது வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். …

The post மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்: வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: