முகலிவாக்கத்தில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

குன்றத்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகலிவாக்கம் 156வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மருத்துவமுகாமை தொடங்கிவைத்தார். அதில் பொதுமருத்துவம், எலும்பு, ரத்த பரிசோதனை, இருதயம், கண், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு மருத்துவங்கள் பார்க்கப்பட்டது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய சத்தான உணவுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சாப்பிட்டு தரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிருந்தார். அமைச்சர் தனது கண்களை பரிசோதனை செய்து கொண்டார். மேலும் அறுவை சிகிச்சை மற்றும் மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்தும் முகாமில் ஆலோசிக்கப்பட்டது. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவம், பரிசோதனை பார்த்துச்சென்றனர். …

The post முகலிவாக்கத்தில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: