1000 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை:தமிழக அறநிலையத்துறை வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், மாநில அளவில் வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில், வேலூர் நாகநாதசுவாமி கோயில், அகத்தீஸ்வரர் கோயில் உட்பட 63 மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திருக்கோயில்களில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கம் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. …

The post 1000 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: