கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி தமிழ்நாடு பத்திரிகை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி தமிழ்நாடு பத்திரிகை விற்பனையாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் மற்றும் மோர், ரஸ்னா, ரோஸ்மில்க், சர்க்கரைப்பொங்கல் மற்றும் இனிப்பு வகைகள் பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, 26 ஆண்டாக கோகுல் நியூஸ் ஏஜென்ஸி உரிமையாளர் ஜெ.ஏழுமலை மற்றும் தமிழ்நாடு பத்திரிகை விற்பனையாளர் சங்கம் இணைந்து அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை, மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு தொடங்கி வைத்தார். இதில், சங்க நிர்வாகிகள் நாச்சியப்பன், சுந்தரம், டில்லிபாபு, கோபிநாத், பாலாஜி, உலகநாதன், சங்கர், குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.    …

The post கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி தமிழ்நாடு பத்திரிகை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Related Stories: