தீபாவளிக்கு மறுநாள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விடுமுறை

அண்ணாநகர்: தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்ல இருப்பதால் வரும் 1ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மற்றும் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்க இருப்பதாக கோயம்பேடு காய்கறி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

The post தீபாவளிக்கு மறுநாள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: