அதிமுக, பாஜ இடையே சிறு உரசல் கூட இல்லை: சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

அருப்புக்கோட்டை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் அதிமுக, பாஜ இடையே சிறு உரசல் கூட கிடையாது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் பாஜவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் திமுகவிற்கும், பாஜவிற்கும் தான் போட்டி இருந்தது. அதிமுகவுடன் பாஜ கூட்டணி தொடரும். வருகிற நாடாளுமன்ற தேர்தலானாலும் அல்லது எந்த தேர்தலானாலும்  அதற்கு அடித்தளம் தேவை. அதனால் தான் அதிமுகவும், பாஜவும் தனித்தனியாக தேர்தலில் நின்றோம். பாஜ, அதிமுக தனித்தனியாக தேர்தலை சந்தித்தாலும் ஒருவருக்கொருவர்  சிறு உரசல்கூட கிடையாது’’ என்றார்….

The post அதிமுக, பாஜ இடையே சிறு உரசல் கூட இல்லை: சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Related Stories: