ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார் நடிகை ரஞ்சனா நாச்சியார்

‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்பட பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ரஞ்சனா நாச்சியார், ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தி மற்றும் இயக்குனர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியலில் எம்.எஸ்.சி., எம்டெக் மற்றும் எல்எல்பி (ஹானர்ஸ்) படித்துள்ள ரஞ்சனா நாச்சியார், கலையார்வம் காரணமாக சினிமாவுக்கு வந்து, ‘துப்பறிவாளன்’ படத்தில் அறிமுகமானார். தற்போது அவர் சில படங்களில் நடித்துக்கொண்டே படம் தயாரிக்கவும் முடிவு செய்து, ஸ்டார் குரு பிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார்.

ஒரு படத்தை நகைச்சுவை நடிகரும் மற்றும் ‘தண்டாயுதபாணி’, ‘பில்லா பாண்டி’, ‘குலசாமி’, ‘கிளாஸ்மேட்ஸ்’ ஆகிய படங்களை இயக்கியவருமான சரவண சக்தி இயக்குகிறார். இன்னொரு படத்தை நடிகர் சங்கரபாண்டியன் இயக்குகிறார். இரு படங்களும் கிராமத்துப் பின்னணியில் உருவாகின்றன. ரஞ்சனா நாச்சியார் கூறுகையில், ‘மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து நான் சினிமாவுக்கு வந்தாலும், பெரிய அளவில் என்னால் ஜெயிக்க முடியாது என்று பலர் சொன்னார்கள். ஒரு நடிகையாக நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான், அடுத்து படம் இயக்க முடிவு செய்துள்ளேன். அதன் முதற்கட்டமாக சில படங்களை தயாரிக்கிறேன்’ என்றார்.

The post ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார் நடிகை ரஞ்சனா நாச்சியார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: