இதையடுத்து 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் நீண்ட போராட்டத்துக்கு பிறகு நேற்றிரவு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இதற்கிடையே காட்டுத் தீ காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்டதை அடுத்து இன்று வழக்கம்போல் பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
The post 2 நாள் போராட்டத்திற்கு பிறகு சதுரகிரி வனப்பகுதியில் காட்டுத் தீ அணைப்பு: பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி appeared first on Dinakaran.
